Tuesday, December 25, 2018

காதல் பரிசு


சிலேடை மொழியில்
எதுகை மோணை வடித்து
பொருந்தாத வரிகளும்
திணிக்கப்பட்ட கவிநயமும்
காகிதத்தில் அச்சிடப்பட்டாத எழுத்தும்
என் நெஞ்சில் இருக்கும்
காதலை தெரியபடுத
வழி தேடி அலைக்கிறோன்
சொல்லப்பட்ட காதலும்
சொல்லப்படாத ஏக்கமும்
என்னவன்  காணுகையில்
வார்த்தையற்ற சிலையன
நிற்கிறேன் அவன் அழகில்
வழிகளை சுமந்த
விழிகளுடன் தவிக்கிறோன்
தனிமையில்
இதய கடிகாரம்
அவனுக்காக  துடிக்கிறது
ஒவ்வொரு நொடியும்
எழுதப்பட்ட கடிதங்கள்
எல்லாம் முகவரியற்ற கிடக்கிறது
என் எண்ண பரணில்
அலைக்கின்ற அலைஒசை
எல்லாம் அவன்
பெயர் உச்சரிக்கிறது
என் துர்தஷ்டமா அல்ல
அவனின் அதிர்ஷ்டமா
பய புள்ள  என்கிட்ட
அடி வாங்கமா தப்பிசிடுமோ
எங்கள் திருமண பத்திரிகையை
ஒத்திகை பார்த்து பழகிய எனக்கு
அவனின் ஈமகரிய பத்திரிகை யை
கண்கள் நம்ப மறுகிறது
அவனுள்  என் காதலை
உணர்ந்த கணத்தில்
அவன் உயிரற்ற
சடலமே 
என் காதல் பரிசாகி  போனது ...


No comments:

Post a Comment

கள்வா

உனக்காக ஏங்கி  தவிக்கும் என் நெஞ்ச அலையில்  நீந்தாமல் என் கண்ணீர் துடைக்க விருவாயா?? என் எண்ண சுவடுகளை  அறியாமல் காக்க வைக்காதடா கள...