Saturday, December 8, 2018

யாரிடம் சொல்வேன்


என்னை பார்த்து கண்ணடித்ததை 
மின்னலைப் பற்றி
யாரிடம் சொல்வேன் !!!
என்னை வஞ்சிய 
சூரியனைப் பற்றி
யாரிடம்  சொல்வேன் !!!!
அலைகின்ற அலைகள் எல்லாம்
என்னை வருடி சென்றதை 
யாரிடம் சொல்வேன் !!!
பிறைமதி சந்திரன்
என்னைப் பார்த்து
சிரித்ததைப் பற்றி
யாரிடம் சொல்வேன் !!!!
குயில் எனக்காக பாடிய
கானத்தைப் பற்றி
யாரிடம் சொல்வேன் !!!!
நட்சத்திரம் பறந்தைப்
பற்றி யாரிடம் சொல்வேன்
ஜிலேபியின் ருசியை 
பற்றி யாரிடம் சொல்வேன் !!!!!
பூ என்னை பார்த்து பூத்ததை 
பற்றி யாரிடம் சொல்வேன் !!!!
வானவில் விரிந்ததை பற்றி
யாரிடம் சொல்வேன் !!!!!
அவ்வளவு சொல்ல நினைத்த
எனக்கு 
பிரம்மன் என்னை படைக்கும்
போது power cut pola
கண்ணை படைக்க power இயலவில்லை
ups இல்லாத கற் காலம் அதல்லவா !!!!


பேனா கோமாளி


எதாவது எழுதலாம் என்று
பேனா எடுத்தேன்
மனம் எங்கு எங்கே சென்றது
அலைப்பாய்ந்த மனதை கட்டுபடுத்தி
எழுத தொடங்கினேன் 
வார்த்தைகள் வர மறுத்தது
நடப்பதை  எழுத நினைத்தேன்
எழுச்சி உரைக்க
அரசியல் வேண்டாம் என்று விட்டுவிட்டேன் நினைப்பதை  எழுத  சிந்திதேன்
நம் நினைப்பதை  எழுத
நீ என்ன கதாயசிரியர்ரா
என்று மனசாட்சி ஒரல்  கொடுத்து
நீ நினைப்பது ஒன்று இங்கு
நடப்பதில்லை என்று
மூளை நினைவுடியது
வேற்று காகிதத்தை  உற்று
பார்த்தேன் என்னே 
கண்கரித்தது
மாசில்லா  இந்த உலகத்தில்
உயிற்று வாழ்கிறோம்
பொய்களை  உண்மை என்று நம்பி
ஏமாறுகிறோம் கோமளியாய் ....


Friday, December 7, 2018

மக்கள் கையில் அதிகாரமிருந்தால்

தடயங்கள் மறைத்து
வேஷம் திரித்து 
திரியும் காவி வெட்டி
கையில் மிக்ச்சர் அரசியல் இருந்து
இருக்காது
மக்கள் கையில் அதிகாரமிருந்தால் !!!!

நிவாரணம் கேட்டு
யாரு கையையும் ஏந்தி நிறக் அவசியமில்லை
நம்ம விவசாயம் பொருளை
அடுத்தவர் விலை நிர்ணய செய்வது நியாயமா????
மக்கள் கையில் அதிகாரமிருந்தால்!!!!

வெளிநாட்டு வாள் பிரதமர்
நம்பி இந்தியா இருக்கையில்
செற்றின் விழியும் 
சேற்றின் வேதனையும் அவர் அறிவாறா???
மக்கள் கையில் அதிகாரமிருந்தால்!!!

சூரியன் உதயமாக்கும்
தாமரை மலரும்
மாறி மாறி
Tweet செய்து ஆள் பலத்தையும்
ஆட்சி அதிகாரத்தையும்
கடற்கரையில் சமாதி
எழுப்புவதில் காட்டும் ஆர்வத்தை
Neet ல் காட்டியிருக்களம்
மக்கள் கையில்  அதிகாரமிருந்தால்!!!!

ஊழலிலும் swiss லும்
மூழ்கி முத்து எடுத்தவர்களுக்கு  எல்லாம்
கந்து வட்டி கொடுமை தெரியுமா என்ன??
Oxgyen cylinder இல்லாமல்
குழந்தை இறப்பதும்
எலி கடித்து கெதர்வதும்
எல்லாம் வேறு எங்கும் அரங்கேறாது
மக்கள் கையில் அதிகாரமிருந்தால்!!!!

கூத்தாடியை கூத்தாடியாகவே   பார்த்துயிருந்தால்  அவனும் நம்மை ஆள வேண்டும் என்று நினைக்க மாட்டான்
யாரே எழுதிய கதைக்கு
நடிக்க தெரிந்தவருக்கு
மக்கள் குறையை அறிய முடியுமா??
மக்கள் கையில் அதிகாரமிருந்தால்!!!!

மக்கள் கையில் அதிகாரமிருந்தால்
இந்தியா அடிமையாய் இருந்து இருக்காது
ராஜிவ்  கொலை குற்றவாளி யாரு என்று தெரிந்து இருக்கும்
தர்மபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகள்
விடுதலை அடைந்து இருக்க மாட்டார்கள்
பாரதியும் உ.வே.சா வும்
தேசய  தந்தை ஆகியிருப்பர்கள்
Notta பற்றி உலக அறிந்துயிருக்காது
பாபர் மசூதியே ராமர் கோவில் லே
144 தடை தேவையில்லை
வரி கட்ட தெரிந்த நமக்கு
அதற்கான கணக்கு கேட்க தெரியவில்லை
#Me too விற்கான தண்டனை எப்போதோ
கிடைத்துயிருக்கும்
மக்கள் கையில் அதிகாரமிருந்தால்!!!


Thursday, December 6, 2018

காபி


நிரந்திமில்லா உலகில்
தொலைந்ததை  தேடி
அலைந்து கலைத்து
வாழ்க்கையை தொலைத்து
நிற்கையில் 
இன்னதனெற்று
புரிகிறது
காபி குடிக்கும்
நொடியில்....


அன்ன நடை


மாலை அந்தி வானம்
அவளை தேட
சூரியன் மயங்கி
செக்கி  நிற்க
என்னவளின் அன்ன நடையில்!!!


Wednesday, December 5, 2018

என் அப்பச்சி


what's up ல் பேசி
imo வில் சிரித்து
skype யில் முறைத்தாலும்
உன்னை நினைத்து
ஏங்காத நாளில்லை 
இது காதலனை நினைத்த உருக்கமில்லை
என் தந்தையை பற்றிய வருத்தம்
வெளிநாட்டு வாழ்க்கை மெழுகுவர்த்தியாய்
கரைய
அன்னிய நாட்டு கரண்சி 
சென்செக்ஸ் ல் ஏரினாலும்
நீ விட்டு சென்ற வேற்றிடம்  மட்டும் மறையவில்லையே ஏன் ப்பா !!!!!
உன்னிடம்  சண்டைப்பிடிப்பதற்காகவே
படித்த நாளிதழ் எல்லாம்
சீண்ட  ஆள்ளில்லாமல் இருக்கிறது !!!
என்னுடன் tom and jerry யை பார்த்து
tennis விளையாடி
speed ஆ போ ப்பா
என் மழலை ரசித்து
lolly pop யை சுவைத்து 
என் பொம்மையாகவே மாறிய
அவர் ...என்றுமே
அவருடைய நகல் நான் !!!!
உன் வருகைகாக  காத்துயிருந்த
என் கண்கள் பூத்துவிட்டது
நாள்காட்டியில் எண்ணிக்கொண்டே இருக்கிறேன் இன்னும்
1 வருடம் 5 மாதம் 3 நாட்கள்காக காத்திருக்கிறது உன் குயில் கூடு 
காத்திரு....
காத்திரிக்கிறோம்......
காத்துக்கொண்டு  இருப்போம்.....


Tuesday, December 4, 2018

திக்திக் நிமிடம்

தனிமை சிறையில்
நானும் என் மெளன மொழியும்
விடை தெரியா உலகில்
வினா தேடும் -பேதை
சுழலும் மின்விசிறியும்
ஒளமிடும் நாய்களுமே
என் சொந்தம் !!!!
அம்வாசை இருட்டும்
யாருமற்ற  இந்த அறையும்
கடிகாரத்தின் ஒசையுமே
என் வேறுமையின்  தோழன் !!!
அலைகின்ற மனசும்
சித்திரமில்லா சுவரும்
நாதியற்ற நெஞ்சமும்
சிரிக்க  மறந்த நாட்களுமே
என் அன்றாடம்!!!!!!
வழியாத  கண்ணீரும்
நனையாத தலையனையே
என் வாழ்நாள் லட்சியம் !!!!!
திக்திக் நிமிடமும்
பியானே கீதமும்
காற்றில் கரையாத
என் மறுபக்கம் !!!!!







பாட்டியின் வடை

 யாருமற்ற சாலையில்
நில ஒளியில்
நீயும் நானும்
ஒருவர் தோள் ஒருவர் சாயந்து
தென்றல் காற்று வீச
ஏங்குயிருந்தே வந்த நாணம்
என்னை தொற்றிக்கொள்ள
நட்சத்திரம் அதை படம்பிடிக்க
தேவர்கள் தூவிய மலர்கள் எல்லாம்
மரங்கள் ஊதிர்க்க
இளையராஜா இசையில்
நாம் கரைந்திட
கருமேகம் சூழச்சி செய்ய
முடிவில்லா பாதையில்
சேர்ந்தே செல்வோம்  நிலவிற்கு
பாட்டியின்  வடையை  சுவைக்க !!!!!


Sunday, December 2, 2018

ராசி

             ராசி ற முட நம்பிக்கை இந்த 21 ஆம் நூற்றாண்டு ல கூட இருக்கு ..கைம்பெண் ஆண்களுக்கு மூன்னாடி வர கூடாது னு இந்த மாறி மூட பக்தி  இன்னும் இருக்கு ..அது விஞ்ஞான உலகம் ..நீங்க நார்திக வாதிய   னு யோசிக்காதிங்க...வெள்ளி ,செவ்வாய் விளக்கு ஏத்துறதையும் ,அம்மனுக்கு கூழ் ஊத்துறத்தையும் தப்பு சொல்ல ல ..நமக்கு மேல ஓரு சக்தி இருக்கு அது ஏசுவா ,அல்லவா ,முருகன னு தெரியல ..தெரிச்சுக்கவும் விரும்பல  ...அய்யே  அவ  முகத்துல முழிச்சிய ராசியில்லாத வ ..என்ன நடக்குமே னு அவுங்க முன்னாடியே சொல்றது..புதுச ஒரு பெண் கல்யாணம் ஆகி வந்த அப்புறம் பல்லு  போன கிழவி செத்த கூட அந்த பெண்ணு  தான் காரணம் னு சொல்றது  எல்லாம் dinosaurs காலத்து ல கேட்டது இப்ப கண் கூட பார்க்கும் போது மனசு வழிக்கிது..கல்யாணம் ஆகி மூழுச 5 மாசம் புருஷன் கூட ஒழுங்க வாழாத   பெண்ண கைம்பெண் னு சடங்கு ,சம்பர்தாயம் எல்லாம் பண்ணி நல்லதுக்கு வாரத..உங்க பெண்ண கூட்டிட்டு  வராதிங்க அண்ணி னு மனசு ல கொஞ்சம் கூட இறம்  இல்லாம சொல்லுவங்க ..இத  கேட்டு ஒரு ஜோடி கண்கள் கண்ணீர் வடிக்கும் சத்தம் இல்லாம  கதவுக்கு  பின்னாடி..இத  விட கொடுமை பிறக்குறது  முன்னாடியே அப்பான  முழுங்கிடு னு வாய் கூசம சொல்லுவங்க அந்த குழந்தை இன்னும் உலகத்தையே  பார்க்கல ..அது குள்ள அதோட  ராசி அ சொல்றது....பெண்ணு பார்க்குறது முன்னாடி அந்த மாப்பிள்ளை வீட்டு நாய் குட்டிக்கு அடிப்பட்டா கூட அந்த பெண் ராசியில்ல னு  சொல்றது அவுங்க கிட்ட மட்டும் சொல்லாம  எல்லாரு  கிட்டையும் சொல்றது.அந்த பெண்ண பாக்குரிங்கள அய்யே  அந்த பெண்ணு வேண்டாம் ராசியில்ல  ...   எங்க பெண்ணுக்கு மட்டும் தான் ராசி யா அந்த பையனுக்கு இல்லையா..ஏப்பா  பாரு பெண்ணு மேல தான் தப்பா..


 
 நான் பிறந்த அன்று மகாலட்சுமி பிறந்துவிட்டாள்  என்று மகிழ்ந்த சொந்தம் எங்கே....
நெற்றியில் திலகமிட்டு
புத்தாடை உடுத்தி
மாமன் சீர் செய்து
ஊற்றார்  உறவினர்கள் கூடி
ஆடு அறுத்து
கேடா வெட்டி
விழாவிற்கு வந்து
வீட்டில் பெண் இருக்கும் விசியத்தை பரப்பி
அப்பே வந்த சொந்த  பந்தம் .
அதே பெண் கணவனை இழந்த நிலையில் புூவையும் போட்டையும்  பறித்து
முன்பின் தெரியாத
யாரே  ஒருவனுக்காக
தான் அடையாளத்தை மாற்றி
அவள் தோள் சாய்ந்து நிற்கும்
வேளையில் ..
அவரையே  யாரே  நால்வர்
துாக்கி சொல்கின்றனர்
இடுகாட்டை நோக்கி ....
இதே நான் இறந்து இருந்தால்
அவருக்கும் இதே நிலையாாா???????


      

தங்கச்சி

        நதி ல அரம்பிச்சு ,பரதம் வரைக்கும் பெம்புளைங்க ஆட்சி தான்...நம்ப விட்டுல இருக்குற வாண்டு வரைக்கும் அதேட power அ காம்பிக்கும்.நம்ப தான் fuse  பல்பு  மாறி ....அண்ணன் ,தம்பி குட பெறந்தவன் எல்லாம் சந்தோஷ்மா தான்இருக்கான் ...இந்த அக்காகும் ,தங்கச்சிகும் இடையில் ல நான் பெறந்துடு நா படுற  கஷ்டம் 😭😭😭காலைல எழுந்திரிசந்து இருந்து ராத்திரி துங்குற  வரைக்கும் ஒரு மனுசன்  எவ்வளவு வேலை தான் பாப்பான் நீங்களே செல்லுங்க ....காலை ள எனக்கு சுப்புரபாதமே தடி மாடு மார்க்கெட் போ டா தான் ...அதுவும் sunday வா இருந்த என் பாடு ரொம்ப திண்ட்டாம் தான்.இஞ்சி வேண்ணும்  ,கறிவேப்பிலை வேண்ணும் சொலற வாய்க்கு அத  ஓரதா சொல்லும் தெரியாது .நம்ப அடிகடி கடைக்கு  வரத பார்த்து அவன் பெண்ண  correct பண்ண வறோம் நினைச்ச மோரைப்பன் அந்த கடைக்காரன்.சரி வேலை ய தான் முடிச்சிடோம் டிவிபாக்கலாம்  னு உட்காந்து sports சானல் வச்ச  அவ்வளவு
நேர எங்க இருந்து வருவானே  தெரியாது  அம்மா பருங்கககககககககககககககககககககக remote அ புடுங்கிடான்    னு ..ஏ நான் ஒன்னுமே பண்ணல. ...டேய் னு அம்மா கரண்டிய விசுவாங்க ...சரி னு சாப்புட உட்காந்த  கறி எல்லாம் அவளுக்கு போட்டு வேறு நல்லிய மட்டும் போடுவாங்க  ...ஆனா அந்த character வீட்டு ல இல்லன அவ்வளே அமைதியான இருக்கும் வீடு எதுவும் எங்க அப்பா இவள  தாங்குறத பார்த்த என்னமே இவள  தான் கஷ்ட  பட்டு பெத்த மாறியும் என்ன தவுட்டுக்கு வாங்க மாறி தான் பண்ணுறங்க ...கொடும டா அதுவும் இந்த pick and drop வேல இருக்கே 😭😭😭😭driver னு தான் சொல்ற முடியாது ..driver தான் .முடியாது னு சொல்லுங்க ஜி னு தான்ன சொல்ல  சொல்றிங்க அப்பா கிட்ட சொல்லி குடுக்குற pocket மணிய  கட் பண்ணிடுவா ..அப்படி எல்லாம் இருந்துடு இப்ப வேற வீட்டுக்கு போய்ட்ட ற த நம்ப முடிய ல 😏😏😏இது குட பரவல  என்ன மாறி இன்ன ஒருத்தன் மாட்டிக்கிடான் ..என்னயே  அப்படிஅடிப்பா  அப்ப  அவ புருஷன் ன எப்படி அடிப்பா  😂😂😂...போகும் போது அண்ணா னு குப்புடா இன்னைக்கு தான் அவ  அப்படி குப்புடு  கேட்குறோன் .miss pannuven ...என்ன feel பண்ணுறிய இனி சட்டை ல pocket இல்லாத சட்டை ய வாங்கி தர சொல்றோன் னு அழுது கிட்டே  சொன்ன 😂😂😂இந்த மாறி ஒரு life வாழ குடுத்து  வச்சு  இருக்கனும்

 ஒரு தாய் வயிற்றில்பிறந்தாலும்
 நீயே என் முதல் தோழி
 Remote ku சண்டை பிடித்தாலும்
பொறி உருண்டையில்  ஒன்று குடினோம்  எங்க வீட்டின் சுவர்களில்     
  அவள்   சித்திரமே
அவள் teaddy bear குட என்னை போட்டு கொடுக்க தெரியும்
அவள் கண்ண  கலங்கி நின்றதில்லை
அவ எண்ண ஒட்டங்களை  அறிந்திட  தவறியதில்லை
அவள் குறும்புகளை ரசித்தில்லை
அவளை கண்டிக்கவும் மறந்தில்லை
தங்கையானபிறந்தாலும்
அவளே என் முதல் குழந்தை!!!!



Saturday, December 1, 2018

பெண்ணியம்

வாள் ஏந்திய வீரர்களை விட
 புத்தி  திட்டிய ஓளவைக்கே  இன்று புகழ்
 புகழ் மாலையை தேடு வதை விட                   அறிவுசுடர்ரை  கூர்மையாக்கு பெண்ணே
பிறந்த மண்ணில் கால் தடங்களை 
அச்சிட வா பெண்ணே
சிற்றார்கள்   மத்தியில்
எதற்கும் அஞ்சாதே
துணிந்து நில்
ஏன் என்று கேள்வி கேட்கும் முன்
திருவாய் மோழியாதே
எவருக்கும் பதில் கூறும் அவசியம் உனக்கில்லை ...
தோழனாய் வந்தால் நேச காரம் நீட்டு
காதல் என்னும் வரையில் விழாதே
திருமணம் பந்தத்தை  நினைக்காதே
தலையே  போனலும்
தலை குனியதே
நெஞ்சை நிமிர்த்தி கொள்
நீ பெண் என்று ....
ஆண்ணுக்கு  உருவம்
கொடுத்தவளே பெண் தான்
துப்பாக்கில் இருந்து வரும் தோட்டவாக இரு
கண்களில் பூசும் மை அழகு வேண்டாம்
உன் மெய் அழகு மட்டும் போதும் !!!!!

 


   

கள்வா

உனக்காக ஏங்கி  தவிக்கும் என் நெஞ்ச அலையில்  நீந்தாமல் என் கண்ணீர் துடைக்க விருவாயா?? என் எண்ண சுவடுகளை  அறியாமல் காக்க வைக்காதடா கள...